கள்ளக்காதலியை கொன்றுவிட்டு ஆட்டோ ஓட்டுனர் தற்கொலை - நடத்தையில் ஏற்பட்ட சந்தேகத்தால் ஆத்திரம்

சென்னையை அடுத்த பள்ளிக்கரணையில் கள்ளக்காதலியை கொன்றுவிட்டு ஆட்டோ ஓட்டுநர் தற்கொலை செய்து கொண்டுள்ள சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கள்ளக்காதலியை கொன்றுவிட்டு ஆட்டோ ஓட்டுனர் தற்கொலை - நடத்தையில் ஏற்பட்ட சந்தேகத்தால் ஆத்திரம்
x
பள்ளிக்கரணையை சேர்ந்த ஆட்டோ ஓட்டுனர் சுரேஷ் தனது முதல் மனைவியிடம் இருந்து விவாகரத்து பெற்ற நிலையில் கூடுவாஞ்சேரி பகுதியை சேர்ந்த ராணி என்பவருடன் குடும்பம் நடத்தி வந்துள்ளார். இந்நிலையில்
நீண்ட நேரமாகியும் அவரது வீட்டின் கதவு திறக்கப்படாததால் சந்தேகமடைந்த அக்கம்பக்கத்தினர் ஜன்னல் வழியாக பார்த்ததில் சுரேஷ் தூக்கில் தொங்கிய நிலையிலும் அருகே ராணியின் உடல் கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். 
முதற்கட்ட விசாரணையில் வேறு ஒருவருடன் ராணி தொடர்பு வைத்திருந்ததால் ஆத்திரமடைந்த சுரேஷ் ராணியை கொலை செய்து விட்டு தற்கொலை செய்திருக்கலாம் என்பது தெரியவந்துள்ளது.


Next Story

மேலும் செய்திகள்