வீட்டின் ஜன்னலை உடைத்து நகை கொள்ளை - ஜன்னல் வைத்த உறவினரே கொள்ளையடித்தது அம்பலம்
சென்னை திருவேற்காட்டில் வீட்டின் ஜன்னலை உடைத்து நகை கொள்ளை அடித்த வழக்கில், ஜன்னல் வைத்த உறவினரே கொள்ளையில் ஈடுபட்டது தெரியவந்துள்ளது.
வீட்டின் உரிமையாளர் நாகராஜன், தனது வீட்டின் ஜன்னல் கம்பியை உடைத்து பீரோவில் இருந்த 22 சவரன் நகை, 15 ஆயிரம் ரூபாய் பணம் ஆகியவற்றை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்றிருப்பதாக காவல் நிலையத்தில் புகார் தெரிவித்திருந்தார். போலீஸ் விசாரணையின் போது நாகராஜனின் உறவினர் நாராயணன் என்பவர் ஜன்னலை உடைத்து கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டது தெரியவந்தது. வீட்டை கட்டும்போது இந்த ஜன்னலை வைத்த நாராயணன், ஜன்னலை உடைத்து கொள்ளையடித்துள்ளார். கொள்ளை அடித்த நகைகளை அடகு வைத்து அந்த பணத்தில் திருப்பதிக்கு குடும்பத்துடன் சென்று நேர்த்திக்கடன் செலுத்த சென்றபோது நாராயணனை போலீசார் கைது செய்துள்ளனர்.
Next Story