நீதிமன்ற வளாகத்தில் தீக்குளிக்க முயன்ற தொழிலாளி - காதலி பேசாததால் விபரீத முடிவு
சேலம் நீதிமன்ற வளாகம் முன்பு சுமைதூக்கும் தொழிலாளி தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.
சேலம் நீதிமன்ற வளாகம் முன்பு சுமைதூக்கும் தொழிலாளி தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது. கொழிஞ்சிப்பட்டியை சேர்ந்த வெங்கடாசலம் என்பவர், ரஞ்சனி என்ற விதவை பெண்ணை கடந்த மூன்று வருடங்களாக காதலித்து வந்துள்ளார். இந்நிலையில் சில தினங்களாக அந்த பெண் பேசாததால், மனமுடைந்த அவர் பெட்ரோல் ஊற்றி தீக்குளிக்க முயன்றார். இதனை கண்ட அங்கிருந்த வழக்கறிஞர்கள் அவரை தடுத்து நிறுத்தி போலீசில் ஒப்படைத்தனர்.
Next Story