சென்னை மற்றும் மதுரை நீதிமன்றங்களில் தேசியக்கொடி ஏற்றி மரியாதை

71 வது குடியரசு தினத்தை முன்னிட்டு, சென்னை உயர்நீதிமன்றத்தில் தலைமை நீதிபதி ஏ.பி.சாஹி தேசியக்கொடி ஏற்றி வைத்தார்.
சென்னை மற்றும் மதுரை நீதிமன்றங்களில் தேசியக்கொடி ஏற்றி மரியாதை
x
71 வது குடியரசு தினத்தை முன்னிட்டு, சென்னை உயர்நீதிமன்றத்தில் தலைமை நீதிபதி ஏ.பி.சாஹி தேசியக்கொடி ஏற்றி வைத்தார். பின்னர், சி.ஐ.எஸ்.எப் வீரர்களின் அணிவகுப்பு மரியாதையை  ஏற்றுக்கொண்ட அவர், அவர்களின் சாகச நிகழ்ச்சிகளையும் கண்டு ரசித்தார்.
இந்த நிகழ்ச்சியில் நீதிபதிகள், வழக்கறிஞர்கள், சட்டத் துறை அமைச்சர், தலைமை செயலாளர், டிஜிபி, சென்னை காவல் ஆணையர், உயர்நீதிமன்ற ஊழியர்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர். 

இதேபோல,  உயர்நீதிமன்ற மதுரை கிளையிலும் குடியரசு  தின விழா கோலாகலமாக  கொண்டாடப்பட்டது. 
மத்திய தொழிலக பாதுகாப்பு படையினரின் அணிவகுப்பு மற்றும் மாணவ-மாணவிகளின் கண்கவர் கலை நிகழ்ச்சிகளும் நடைபெற்றன.

Next Story

மேலும் செய்திகள்