கடலூர் : ஹைட்ரோ கார்பன் திட்டத்தை கைவிடக் கோரி விவசாயிகள் நூதனப் போராட்டம்

கடலூர் மாவட்ட விவசாயிகள் குறைகேட்பு கூட்டம் மாவட்ட ஆட்சியர் அன்புச் செல்வன் தலைமையில் இன்று நடைபெற்றது.
கடலூர் : ஹைட்ரோ கார்பன் திட்டத்தை கைவிடக் கோரி விவசாயிகள் நூதனப் போராட்டம்
x
கடலூர் மாவட்ட விவசாயிகள் குறைகேட்பு கூட்டம் மாவட்ட ஆட்சியர் அன்புச் செல்வன் தலைமையில்  இன்று நடைபெற்றது. இதில் மாவட்டம் முழுவதிலும் இருந்து விவசாயிகள் கலந்து கொண்ட நிலையில் டெல்டா பகுதி விவசாயிகள் தங்கள் பகுதிகளுக்கு ஹைட்ரோ கார்பன் திட்டம் மீண்டும் வருவதற்கான பணிகள் துவங்கியுள்ளதை கண்டித்து கை மற்றும் கால்களை கட்டிக்கொண்டு மாவட்ட ஆட்சியர் முன்பு மண்டியிட்டு எங்களை காப்பாற்றுங்கள் என கோஷமிட்டனர். தொடர்ந்து கூட்டத்தில் கைகளை கட்டியபடியே நின்றவண்ணம் ஹைட்ரோகார்பன் திட்டத்தை முழுமையாக கைவிட வேண்டும் என்ற கோரிக்கை முன்வைத்தனர். 

Next Story

மேலும் செய்திகள்