டி.என்.பி.எஸ்.சி ஆலோசனை கூட்டம் - சென்னையில் இன்று நடைபெறவில்லை

குரூப் - 4 தேர்வு முறைகேடு புகார் விவகாரம் தொடர்பாக டி.என்.பி.எஸ்.சி உயர்மட்ட அதிகாரிகள் ஆலோசனை கூட்டம் இன்று நடைபெறவில்லை.
டி.என்.பி.எஸ்.சி ஆலோசனை கூட்டம் - சென்னையில் இன்று நடைபெறவில்லை
x
குரூப் - 4 தேர்வு முறைகேடு புகார் விவகாரம் தொடர்பாக டி.என்.பி.எஸ்.சி  உயர்மட்ட அதிகாரிகள் ஆலோசனை கூட்டம் இன்று நடைபெறவில்லை.
கடந்த செப்டம்பரில் நடந்த குரூப்-4 தேர்வில் ராமநாதபுரம் மாவட்டம், ராமேஸ்வரம் மற்றும் கீழக்கரை பகுதிகளில் உள்ள 9 தேர்வு மையங்களில் தேர்வெழுதியவர்கள் அதிகளவில் அரசு பணிக்கு தேர்வு பெற்றனர். இது தொடர்பாக முறைகேடு புகார் எழுந்தது.  இந்த விவகாரத்தில் முக்கிய முடிவு எடுப்பதற்காக, உயர்மட்ட அளவிலான அதிகாரிகள் கூட்டம், இன்று  டிஎன்பிஎஸ்சி அலுவலகத்தில் நடக்கும் என்று கூறப்பட்டது. ஆனால் கடைசி நேரத்தில் ஆலோசனை கூட்டம் நடைபெறவில்லை. நாளை ஆலோசனை நடத்தி், அதன்பின் முடிவை வெளியிட டி.என்.பி.எஸ்.சி.  திட்டமிட்டுள்ளது.  

Next Story

மேலும் செய்திகள்