நாளை நடக்கிறது பாலமேடு ஜல்லிக்கட்டு : பாதுகாப்பு பணியில் 2000 போலீசார்

மதுரையில் புகழ்பெற்ற பாலமேடு ஜல்லிக்கட்டு நாளை நடைபெறுகிறது.
நாளை நடக்கிறது பாலமேடு ஜல்லிக்கட்டு : பாதுகாப்பு பணியில் 2000 போலீசார்
x
மதுரையில் புகழ்பெற்ற பாலமேடு ஜல்லிக்கட்டு நாளை நடைபெறுகிறது. இதில் 700 காளைகளும் 936 வீரர்களும் முன்பதிவு செய்து தயார் நிலையில் உள்ளனர். போட்டி காலை 8 மணிக்கு துவங்கி மாலை 4 மணிக்கு முடிவடைகிறது. இதனைத் முன்னிட்டு 2 காவல் கண்காணிப்பாளர்கள், 4 துணை கண்காணிப்பாளர், 30 மாவட்ட துணை கண்காணிப்பாளர், 80 இன்ஸ்பெக்டர்கள், என மொத்தம் 2 ஆயிரம்  போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர். வீரர்களுக்கும், காளைகளுக்கும் காலை 6 மணிக்கு மறு மருத்துவ பரிசோதனை நடைபெற்று, அதில் தேர்ச்சி பெறும் காளைகள் மற்றும் வீரர்கள் மட்டுமே களத்தில் அனுமதிக்கப்பட உள்ளனர். 


Next Story

மேலும் செய்திகள்