நெல்லை கண்ணன் ஜாமின் கோரிய வழக்கு : தமிழக அரசுக்கு உயர்நீதிமன்ற கிளை நோட்டீஸ்

பிரதமர் மோடி மற்றும் மத்திய அமைச்சர் அமித்ஷா குறித்து அவதூறாக பேசியதாக தன் மீது பதியப்பட்ட வழக்கை ரத்து செய்யக்கோரி நெல்லை கண்ணன் உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் மனு தாக்கல் செய்திருந்தார்.
நெல்லை கண்ணன் ஜாமின் கோரிய வழக்கு : தமிழக அரசுக்கு உயர்நீதிமன்ற கிளை நோட்டீஸ்
x
பிரதமர் மோடி மற்றும் மத்திய அமைச்சர் அமித்ஷா குறித்து அவதூறாக பேசியதாக தன் மீது பதியப்பட்ட வழக்கை ரத்து செய்யக்கோரி நெல்லை கண்ணன் உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் மனு தாக்கல் செய்திருந்தார். இந்த மனு இன்று நீதிபதி ஜெகதீஷ் சந்திர முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது நெல்லை கண்ணன் ஜாமின் கோரிய வழக்கு  மாவட்ட நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது என்றும்,  வழக்கை ரத்து செய்யக் கூடாது என்றும் அரசு தரப்பில் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து அவர் மீதான  வழக்கை ரத்து செய்வது குறித்து தமிழக அரசு பதிலளிக்க நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்ட நீதிபதி,  வழக்கு விசாரணையை ஜனவரி 20ஆம் தேதிக்கு ஒத்திவைத்தார்.

Next Story

மேலும் செய்திகள்