நாளை இரண்டாம் கட்ட உள்ளாட்சி தேர்தல் - வாக்குப்பதிவிற்கான ஏற்பாடுகள் தயார்

தமிழகத்தில் ஊரக உள்ளாட்சி தேர்தலில், இரண்டாம் கட்ட ஓட்டுப்பதிவு நடக்கும் இடங்களில் நேற்று மாலையுடன் பிரசாரம் நிறைவடைந்தது.
நாளை இரண்டாம் கட்ட உள்ளாட்சி தேர்தல் - வாக்குப்பதிவிற்கான ஏற்பாடுகள் தயார்
x
தமிழகத்தில், 27 மாவட்டங்களில், ஊரக உள்ளாட்சி தேர்தல், இரண்டு கட்டமாக நடத்தப்படுகிறது. முதல் கட்ட தேர்தல், 27ஆம் தேதி நடந்தது. இந்த தேர்தலில், 76 புள்ளி 19 சதவீத ஓட்டுகள் பதிவாகின.

இந்நிலையில், 255 மாவட்ட கவுன்சிலர்; 2 ஆயிரத்து 544 ஊராட்சி ஒன்றிய கவுன்சிலர்கள்; 4 ஆயிரத்து 924 ஊராட்சி தலைவர்கள்; 38 ஆயிரத்து, 916 கிராம ஊராட்சி கவுன்சிலர்கள் பதவிகளுக்கு இரண்டாம் கட்ட தேர்தல், நாளை நடக்க உள்ளது.

இரண்டாம் கட்ட தேர்தலில், ஒரு கோடியே 28 லட்சம் வாக்காளர்கள் வாக்களிப்பதற்காக, 25 ஆயிரத்து, 8 ஓட்டுச்சாவடிகள் அமைக்கப்பட்டு உள்ளன. 

இரண்டாம் கட்ட வாக்குப் பதிவு நடைபெறும் இடங்களில் நேற்று மாலை, 5 மணியுடன், தேர்தல் பிரசாரம் நிறைவடைந்தது. தேர்தல் பிரசாரத்திற்காக, வெளியூர்களில் இருந்து வந்தவர்கள் உடனடியாக வெளியேறுமாறு, தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. 


Next Story

மேலும் செய்திகள்