ஊரக உள்ளாட்சி தேர்தல் : சொந்த ஊரில் வாக்களித்தார் முதலமைச்சர் பழனிசாமி

முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி சொந்த ஊரான சேலம் மாவட்டம் சிலுவம்பாளையத்தில் வாக்களித்தார்.
ஊரக உள்ளாட்சி தேர்தல் : சொந்த ஊரில் வாக்களித்தார் முதலமைச்சர் பழனிசாமி
x
ஊரக உள்ளாட்சி தேர்தல் முதல் கட்ட வாக்குப்பதிவு முதலமைச்சரின் சொந்த ஊரான சிலுவம்பாளையத்திலும் நடைபெற்று வருகிறது. இந்த தேர்தலில் வாக்களிப்பதற்காக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று காலை சேலத்திற்கு சென்றார். சென்னை விமான நிலையத்தில் இருந்து காலை 10.25 மணிக்கு புறப்பட்ட அவர், 11.20 மணிக்கு சேலம் காமலாபுரம் விமானம் நிலையம் சென்றடைந்தார். அங்கிருந்து கார் மூலம் தனது சொந்த ஊரான சிலுவம்பாளையம் வந்தார். பின்னர், அங்கிருக்கும் தனது வீட்டிற்கு சென்ற முதலமைச்சர் பழனிசாமி, மனைவி ராதா பழனிசாமி மற்று மகன் மிதுன் குமார் உட்பட தனது குடும்பத்தாருடன் வாக்களிக்க வந்தார். வாக்குச்சாவடிக்கு தனது குடும்பத்தாருடன் நடந்தே வருகை தந்தார்.

Next Story

மேலும் செய்திகள்