ஓசூர்: குப்பையில் வீசப்பட்ட குட்கா பாக்கெட்டுகள் - கொட்டி சென்றவர்களை தேடும் அதிகாரிகள்
ஓசூரில் தடை செய்யப்பட்ட குட்கா பாக்கெட்டுகள் குப்பையில் வீசப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
நேதாஜிநகர் பகுதியில் உள்ள குப்பை தொட்டியில் ஆயிரக்கணககான குட்கா பாக்கெட்டுகள் கொட்டப்பட்டு கிடந்தன. இதனை கண்டு அதிர்ச்சி அடைந்த பொதுமக்கள் மாநகராட்சி அதிகாரிகளுக்கு தகவல் அளித்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்த அதிகாரிகள் , அவற்றை பறிமுதல் செய்து கொட்டி சென்றவர்கள் யார் என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story