கோவை: கிரகண நேரத்தில் உணவு உண்ணும் நிகழ்ச்சி
சூரிய கிரணகத்தையொட்டி தந்தை பெரியார் திராவிடக்கழகம் சார்பில் கோவையில் உணவு உண்ணும் நிகழ்ச்சி நடைபெற்றது.
'அறிவு விருந்து உணவு விருந்து' என்ற பெயரில் காந்திபுரம் பெரியார் படிப்பகத்தில் இந்த நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் கு.இராமகிருட்டிணன் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர். காலை உணவான இட்லி, சட்னி, சாம்பார், கேசரி பரிமாறப்பட்டது. சூரிய கிரகணத்தின் போது, உணவு உண்ணக்கூடாது என்ற மூடநம்பிக்கையை போக்கும் வகையில், அறிவியலை வளர்க்க வேண்டும் என்ற நோக்கத்தில், நிகழ்ச்சி நடத்தப்பட்டதாக, தந்தை பெரியார் திராவிடக்கழகத்தினர் தெரிவித்தனர்.
Next Story