தமிழகத்தில் பரவலாக கனமழை
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் பல இடங்களில் கனமழை பெய்து வருகிறது.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் பல இடங்களில் கனமழை பெய்து வருகிறது. சென்னையில் எழும்பூர், சேத்துப்பட்டு, சிந்தாதிரிப்பேட்டை, புரசைவாக்கம், ராயப்பேட்டை உள்ளிட்ட நகரின் முக்கிய பகுதிகளிலும் புறநகர் பகுதிகளிலும் காலை முதலே கனமழை பெய்து வருகிறது. பிரதான சாலைகளில் தண்ணீர் தேங்கியிருப்பதால் வாகன ஓட்டிகள் சிரமம் அடைந்தாலும், 2 வாரங்களுக்கு பிறகு மழை பெய்திருப்பது மக்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பொன்னேரி, மீஞ்சூரில் காற்றுடன் கனமழை
திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரி சுற்று வட்டார பகுதிகளில் காற்றுடன், அரை மணி நேரம் கன மழை கொட்டியது. மீஞ்சூர், பழவேற்காடு, சோழவரம் உள்ளிட்ட பகுதிகளில் பெய்த மழையால், சாலைகளில் தண்ணீர் தேங்கியது.
கரூர்
கரூர் மாவட்டத்தில் இன்று அதிகாலை முதலே பரவலாக மழை பெய்து வருகிறது விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். அரவக்குறிச்சி, கிருஷ்ணராயபுரம், லாலாபேட்டை, குளித்தலை ஆகிய பகுதிகளில் பரவலாக மழை பெய்து வருகிறது.
காரைக்குடி
சிவகங்கை மாவட்டம் காரைக்குடி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் அதிகாலை முதலே பரவலாக மழை பெய்தது. இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. அதேசமயம் மழையால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளர்.
தஞ்சாவூர்
தஞ்சை சுற்றுவட்டார பகுதியில் பரவலாக பெய்த மழையால் விவசாயிகள் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். தஞ்சையின் செங்கிப்பட்டி, வல்லம் வெட்டிக்காடு திருவையாறு உள்ளிட்ட பல பகுதிகளில் மழை பெய்தது. இந்த மழை சம்பா சாகுபடிக்கு பயனுள்ளதாக அமையும் என விவசாயிகள் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர்.
Next Story