வங்கி மேலாளர் அடித்து கொலை - அதிமுக கிளை செயலாளர் உள்ளிட்ட 7 பேர் கைது

ஊராட்சி தலைவர் பதவிக்கு யார் போட்டியிடுவது என்ற விவகாரத்தில் வங்கி மேலாளர் அடித்து கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
வங்கி மேலாளர் அடித்து கொலை - அதிமுக கிளை செயலாளர் உள்ளிட்ட 7 பேர் கைது
x
விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே உள்ள  கோட்டைப்பட்டி ஊராட்சி மன்ற தலைவர் பதவிக்கு யார் போட்டியிடுவது என்பது தொடர்பாக குறிப்பிட்ட ஒரு சமுதாயத்தினர் நள்ளிரவு ஆலோசனை கூட்டம் நடத்தினர்.

அப்பொழுது அதே ஊரை சேர்ந்த அதிமுக கிளைச் செயலாளர் ராமசுப்பு என்பவர் தான் போட்டியிட விரும்புவதாக தெரிவித்துள்ளார்.

காங்கிரஸ் கட்சி பிரமுகர் சுப்புராம் என்பவரும் தேர்தலில் போட்டியிடுவதற்கு  விருப்ப மனு வாங்கி வந்துள்ளார். 

இந்த கூட்டத்திற்கு ராமசுப்பு தனக்கு வேண்டிய நபர்களை மட்டும் வைத்து கூட்டம் நடத்தியதாக கூறப்படுகிறது.

இதனை அப்பகுதியை சேர்ந்த தனியார் வங்கி மேலாளரான சதீஷ்குமார் தட்டி கேட்டுள்ளார். 

இதனால் ஆத்திரமடைந்த ராமசுப்பு மற்றும் அவரது ஆட்கள் சதீஷ்குமாரை சரமாரியாக தாக்கியதில் அவர் உயிரிழந்தார். 


இது குறித்து வழக்குபதிவு செய்த ஏழாயிரம் பண்ணை போலீசார், கோட்டை பட்டியைச் சேர்ந்த அதிமுக கிளை செயலாளர் ராமசுப்பு, உள்ளிட்ட 7 பேரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.  


Next Story

மேலும் செய்திகள்