கரூரில் ரயில் நிலையத்தை நீதிமன்ற ஊழியர்கள் ஜப்தி செய்ய முயற்சி
கரூரில் ரயில் நிலையத்தை, நீதிமன்ற ஊழியர்கள் ஜப்தி செய்ய வந்ததால், பரபரப்பு ஏற்பட்டது.
கரூரில் ரயில் நிலையத்தை, நீதிமன்ற ஊழியர்கள் ஜப்தி செய்ய வந்ததால், பரபரப்பு ஏற்பட்டது. கரூர் முதல் சேலம் வரை அகல ரயில் பாதை அமைப்பதற்காக, கடந்த ஆயிரத்து 999-ஆம் ஆண்டு, வாங்கல் பகுதியை சேர்ந்த சுப்பிரமணியன் என்பவருக்கு சொந்தமான இரண்டரை ஏக்கர் நிலத்தை, ரயில்வே நிர்வாகம் கையகப்படுத்தியது, இது தொடர்பான வழக்கில், சுப்பிரமணியனுக்கு ஒரு கோடியே 40 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்க, கடந்த 2018-ஆம் ஆண்டு நீதிமன்றம் உத்தரவிட்டது. ஆனால் இதுவரை ரயில்வே நிர்வாகம் இழப்பீடு வழங்காததால், கரூர் ரயில் நிலையத்தை, நீதிமன்ற ஊழியர்கள் ஜப்தி செய்ய முயன்றனர்.
Next Story