திருச்சியில் கரன்சி நோட்டுகள் கடத்தல் - இரண்டு பெண்களிடம் விசாரணை
திருச்சியில் இருந்து மலேசியாவிற்கு கடத்த முயன்ற கரன்சி நோட்டுக்களை சுங்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
திருச்சியில் இருந்து மலேசியாவிற்கு கடத்த முயன்ற கரன்சி நோட்டுக்களை சுங்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். கோலாலம்பூருக்கு விமானம் ஒன்று புறப்பட தயாராக இருந்த நிலையில், பயணிகளின் உடமைகளை அதிகாரிகள் சோதனை செய்தனர். அப்போது ரஸ்மின், தஸ்சினா பேகம் ஆகிய 2 பெண்கள், மறைத்து கடத்திச் செல்ல இருந்த 21 லட்சத்து 56 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள இந்திய ரூபாய் மற்றும் மலேசிய ரிங்கிட் கரன்சிகளை, பறிமுதல் செய்தனர். தொடர்ந்து அவர்களிடம் விசாரணை நடைபெற்று வருகிறது.
Next Story