"பெண்களைப் பற்றி அநாகரீகமாக பேசியதாக புகார்" - நடிகர் பாக்கியராஜ்க்கு சம்மன்

நடிகர் பாக்கியராஜ், வரும் திங்கட்கிழமை விசாரணைக்கு ஆஜராகுமாறு, தமிழ்நாடு மகளிர் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
பெண்களைப் பற்றி அநாகரீகமாக பேசியதாக புகார் - நடிகர் பாக்கியராஜ்க்கு சம்மன்
x
நடிகர் பாக்கியராஜ், வரும் திங்கட்கிழமை விசாரணைக்கு ஆஜராகுமாறு, தமிழ்நாடு மகளிர் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. சென்னையில் சமீபத்தில் நடைபெற்ற இசைவெளியிட்டு நிகழ்ச்சியொன்றில் பேசிய பாக்கியராஜ், பொள்ளாச்சி விவகாரத்தில், பெண்களின் பலவீனத்தை இளைஞர்கள் பயன்படுத்திக்கொண்டதாக கூறினார். இதில் பெண்கள் மீது தவறு இருக்கிறது என்றும் தெரிவித்திருந்தார். பாக்கியராஜின் இந்த கருத்து சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், வரும் திங்களன்று, விசாரணைக்கு ஆஜராகுமாறு, தமிழ்நாடு மகளிர் ஆணையம் சம்மன் அனுப்பியுள்ளது. 

Next Story

மேலும் செய்திகள்