அகஸ்தியர் அருவியில் வெள்ளப்பெருக்கு : அருவியில் சுற்றுலா பயணிகள் குளிக்க தடை
நெல்லை மாவட்டம் பாபநாசம் அணை முழுகொள்ளளவை எட்டியதை அடுத்து, அணையில் இருந்து 3 ஆயிரம் கனஅடி உபரிநீர் திறக்கப்பட்டுள்ளது.
நெல்லை மாவட்டம் பாபநாசம் அணை முழுகொள்ளளவை எட்டியதை அடுத்து, அணையில் இருந்து 3 ஆயிரம் கனஅடி உபரிநீர் திறக்கப்பட்டுள்ளது. இதனால் தாமிரபரணி ஆற்றில் நீர்வரத்து அதிகரித்துள்ளதால் அகஸ்தியர் அருவியில் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனை அடுத்து, பாதுகாப்பு கருதி, அகஸ்தியர் அருவியில் சுற்றுலா பயணிகள் குளிக்க மாவட்ட நிர்வாகம் தடைவிதித்து உத்தரவிட்டுள்ளது. மேலும், அம்பாசமுத்திரம் தாலுகாவில் தாமிரபரணி கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது.
Next Story