அரசு பேருந்தின் கண்ணாடியை உடைத்த பயணி : சில்லறை இல்லாததால் கீழே இறக்கி விட்டதால் ஆத்திரம்
ஆரணியை சேர்ந்த கமலக்கண்ணன் என்ற பயணி,சென்னை சென்ட்ரலில் இருந்து, மாநகர பேருந்தில் ஏறி உள்ளார்.
ஆரணியை சேர்ந்த கமலக்கண்ணன் என்ற பயணி,சென்னை சென்ட்ரலில் இருந்து, மாநகர பேருந்தில் ஏறி உள்ளார். பேருந்து எல்ஐசி அருகே வந்தபோது, 500 ரூபாய் கொடுத்து டிக்கெட் எடுக்க முயன்றுள்ளார். அப்போது பேருந்தின் நடத்துனர் சில்லறை இல்லை எனக்கூறி அவரை நடுரோட்டில் இறக்கி விட்டுள்ளார். ஆத்திரமடைந்த கமலக்கண்ணன், ஆட்டோ பிடித்துக்கொண்டு பேருந்தை பின் தொடர்ந்து கண்ணாடியை கல்லால் அடித்து நொறுக்கியுள்ளார். இதனால் பரபரப்பு ஏற்பட்டது.
Next Story