கிறிஸ்தவ திருமணங்களை பதிவு செய்து சான்றிதழ் வழங்க கோரிய மனு : தமிழக பதிவுத் துறைக்கு நீதிமன்றம் உத்தரவு

கிறிஸ்தவ திருமணங்களை பதிவு செய்து சான்றிதழ் வழங்க கோரிய மனுவிற்கு பதிலளிக்கும்படி, தமிழக பதிவுத்துறைக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கிறிஸ்தவ திருமணங்களை பதிவு செய்து சான்றிதழ் வழங்க கோரிய மனு : தமிழக பதிவுத் துறைக்கு நீதிமன்றம் உத்தரவு
x
கிறிஸ்தவ திருமணங்களை பதிவு செய்ய பதிவுத்துறை மறுக்கிறது. இது தொடர்பாக தான் அனுப்பிய மனுவுக்கு எந்த பதிலும் இல்லை என வேலூரை சேர்ந்த பிஷப் ஒருவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். அந்த வழக்கு நீதிபதிகள் சத்திய நாராயணன் மற்றும் ஷேஷாசாயி அடங்கிய அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தது. ‌அப்போது, கிறிஸ்தவர்களுக்கு நடத்தபட்ட திருமணம் குறித்து சம்பந்தப்பட்ட திருச்சபைகள் அனுப்பி வைக்கும் சான்றிதழ்களை பதிவுத்துறை பராமரிக்க மட்டுமே செய்வதாகவும், அதனை பதிவு செய்வது இல்லை எனவும் அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து மனுதாரரின் மனுவிற்கு, டிசம்பர் 6 ஆம் தேதிக்கு பதிலளிக்கும் படி, பதிவுத்துறைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்