சென்னை: கடற்கரையில் கரை ஒதுங்கிய ஆண் சடலம்

சென்னை காசிமேடு கடற்கரையில் அடையாள தெரியாத ஆண் சடலம் ஒன்று கரை ஒதுங்கியது அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை: கடற்கரையில் கரை ஒதுங்கிய ஆண் சடலம்
x
சென்னை காசிமேடு கடற்கரையில் அடையாள தெரியாத ஆண் சடலம் ஒன்று கரை ஒதுங்கியது அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சடலத்தை கண்ட மீனவர்கள் உடனடியாக போலீசாருக்கு தகவல் அளித்தனர். இதையடுத்து உடலை மீட்ட போலீசார், இறந்தது யார் என்பது குறித்து விசாரித்து வருகின்றனர். இதனிடையே, கடந்த வாரம் திருவொற்றியூர் கடற்பகுதியில் அலை இழுத்து சென்றதில், பாபு என்ற நபர் மாயமாகியிருந்தார். இந்நிலையில், இந்த சடலம் மாயமான பாபுவின் உடலாக இருக்குமோ என்ற சந்தேகத்தில் போலீசார் விசாரித்து வருகின்றனர். 


Next Story

மேலும் செய்திகள்