"சர்க்கரை குடும்ப அட்டைதாரர்கள் தகுதி அடிப்படையில் அரிசி அட்டைகளாக மாற்றம் செய்து கொள்ளலாம்" - தமிழக அரசு அறிவிப்பு

சர்க்கரை குடும்ப அட்டைதாரர்கள் தகுதியின் அடிப்படையில் அரிசி அட்டைகளாக மாற்றம் செய்து கொள்ளலாம் என தமிழக அரசு அறிவித்துள்ளது.
சர்க்கரை குடும்ப அட்டைதாரர்கள் தகுதி அடிப்படையில் அரிசி அட்டைகளாக மாற்றம் செய்து கொள்ளலாம் - தமிழக அரசு அறிவிப்பு
x
சர்க்கரை அட்டை வைத்திருப்பவர்களில் பெரும்பாலானோர் அரிசி பெறக்கூடிய வகையில் குடும்ப அட்டைகளை மாற்றம் செய்து தரவேண்டும் என்ற கோரிக்கை விடுத்து வருகின்றனர். இந்த நிலையில்  தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பில் சர்க்கரை குடும்ப அட்டைதாரர்கள்  தகுதியின் அடிப்படையில் அரிசி அட்டைகளாக மாற்றம் செய்து கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.  அதற்கான விண்ணப்பங்களை,குடும்ப அட்டையின் நகலினை இணைத்து இன்று முதல் 26-ம் தேதி வரை www.tnpds.gov.in  என்ற  இணைய முகவரியிலும்  சம்மந்தப்பட்ட வட்ட வழங்கல் அலுவலர்கள் மற்றும் உதவி ஆணையர்களிடமும் சமர்ப்பிக்கலாம் என்றும் கூறப்பட்டுள்ளது. அவ்வாறு பெறப்படும் விண்ணப்பங்கள் உடனடியாகப் பரிசீலித்து அரிசி அட்டைகளாக  மாற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.



Next Story

மேலும் செய்திகள்