பாரா கிளைடிங்: தவறி விழுந்த புதுமாப்பிள்ளை - சடலமாக கண்டெடுக்கப்பட்ட பரிதாபம்
இமாச்சலபிரதேசத்திற்கு சுற்றுலா சென்றிருந்த சென்னையை சேர்ந்த புதுமாப்பிள்ளை பாரா கிளைடிங் சென்ற போது தவறி விழுந்து உயிரிழந்துள்ளார்.
சென்னை அமைந்தகரையை சேர்ந்த புதுமண தம்பதி அரவிந்த் மற்றும் பிரீத்தி கடந்த வாரம் இமாச்சல பிரதேசம் குலு மணாலிக்கு சென்றுள்ளனர். அங்கு இருவரும் பாரா கிளைடிங்கில் இருவரும் பயணம் செல்ல நினைத்துள்ளனர். ஆனால் ஒருவர் மட்டுமே அனுமதிக்க முடியும் என்பதால் அரவிந்த் முதலாவதாக ஏறிய நிலையில் நடுவானில் தொழில்நுட்ப கோளாறு காரணமாக பாராசூட் விழுந்து விபத்து ஏற்பட்டுள்ளது. இதையடுத்து பனிப்பாறைகளுக்கு இடையே அரவிந்தை சடலமாக இமாச்சல் பிரதேச போலீசார் மீட்டுள்ளனர். அவரது உடல் இன்று சென்னை கொண்டு வரப்படுகிறது. சுற்றுலா சென்ற இடத்தில் புதுமாப்பிள்ளை உயிரிழந்த சம்பவம் குடும்பத்தினரை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
Next Story