மாஞ்சா நூல் கழுத்தறுத்து சிறுவன் பலி எதிரொலி : மாஞ்சா நூல்களை கண்டறிந்து அகற்றும் போலீஸார்

சென்னை ஆர்.கே.நகரில் மாஞ்சா நூல்களை அகற்றும் பணியில் போலீஸார் ஈடுபட்டனர்.
மாஞ்சா நூல் கழுத்தறுத்து சிறுவன் பலி எதிரொலி : மாஞ்சா நூல்களை கண்டறிந்து அகற்றும் போலீஸார்
x
கொருக்குப்பேட்டை மீனாம்பாள் நகர் மேம்பாலத்தில் கடந்த மூன்றாம் தேதி பெற்றோருடன் சென்ற 3 வயது சிறுவன், மாஞ்சா நூலால் கழுத்தறுபட்டு உயிரிழந்தான். இதையடுத்து, மாஞ்சா நூல் விற்பவர்களை கைது செய்யும் நடவடிக்கையில் போலீசார் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில், மேம்பாலம், கட்டிடம் மற்றும் சாலைகளில் உள்ள மின்கம்பங்களில் தொங்கும் கயிறுகள் மற்றும் மாஞ்சா நூல்களை அகற்றும் பணியில் ஆர்.கே.நகர் போலீசார் ஈடுபட்டுள்ளார். மாநகராட்சி பணியாளர்களின் உதவியோடு வைத்தியநாதன் மேம்பாலம், மீனம்பாள் நகர் மேம்பாலம் உள்ளிட்ட பகுதிகளிலும் மாஞ்சா நூல், கயிறுகளை போலீஸார் அகற்றினர்.


Next Story

மேலும் செய்திகள்