தென்காசி மாவட்டத்தில் இணைக்கப்பட்டது ஆலங்குளம் தொகுதி

தென்காசி புதிய மாவட்டத்தின் ஆட்சியர் அலுவலகம் தென்காசியில் கட்டப்பட உள்ளது.
தென்காசி மாவட்டத்தில் இணைக்கப்பட்டது ஆலங்குளம் தொகுதி
x
தென்காசி புதிய மாவட்டத்தின் ஆட்சியர் அலுவலகம் தென்காசியில் கட்டப்பட உள்ளது. திருநெல்வேலி மாவட்டத்தில் இருந்து  தென்காசியை தலைமையிடமாக கொண்டு புதிய மாவட்டம் உருவாக்கப்படும் என சட்டப்பேரவையில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்திருந்தார். தென்காசி மாவட்டத்தை உருவாக்க ஐ.ஏ.எஸ். அதிகாரி நியமிக்கப்பட்டு, பொதுமக்களிடம் கருத்து கேட்கப்பட்ட நிலையில் திருநெல்வேலி மாவட்டம் பிரிக்கப்பட்டு புதிய மாவட்டமாக தென்காசி மாவட்டம் உருவாக்கப்பட்டு உள்ளதாக தமிழக அரசு, அரசாணை வெளியிட்டுள்ளது. புதிய மாவட்டத்தில், தென்காசி, செங்கோட்டை, கடையநல்லூர், சிவகிரி, சங்கரன்கோவில் உட்பட 8 வட்டங்கள் கொண்டு வரப்பட்டு உள்ளது. ஆலங்குளம் தொகுதியும் தென்காசி மாவட்டத்துடன் இணைக்கப்பட்டுள்ளது. தென்காசியில் புதிய மாவட்டத்தின்  ஆட்சியர் அலுவலகம் அமைய உள்ளது.

Next Story

மேலும் செய்திகள்