மருதா நதி நாளை அணை திறப்பு :முதலமைச்சர் பழனிசாமி உத்தரவு

திண்டுக்கல் மாவட்டம் ஆத்தூர் மருதாநதி அணையில் இருந்து நாளை முதல் தண்ணீர் திறக்கப்படும் என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.
மருதா நதி நாளை அணை திறப்பு :முதலமைச்சர் பழனிசாமி உத்தரவு
x
திண்டுக்கல் மாவட்டம் ஆத்தூர் மருதாநதி அணையில் இருந்து நாளை முதல் தண்ணீர் திறக்கப்படும் என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று 90 நாட்களுக்கு தண்ணீர் திறக்க உத்தரவிட்டிருப்பதாக குறிப்பிட்டுள்ளார். இதன் மூலம் 6 ஆயிரத்து 583 ஏக்கர் விளைநிலங்கள் பாசன வசதிபெறும் என்றும் நீரை சிக்கனமாக பயன்படுத்தி, உயர் மகசூல் பெற வேண்டும் எனவும் ஆத்தூர் விவசாயிகளுக்கு முதலமைச்சர் வேண்டுகோள் விடுத்துள்ளார். 

Next Story

மேலும் செய்திகள்