பிரதமர் மோடி கவிதை தமிழ் மொழிபெயர்ப்பு வெளியீடு : நடிகர் விவேக், தயாரிப்பாளர் தனஞ்செயன் நெகிழ்ச்சி
பிரதமர் மோடி, மாமல்லபுரம் வருகையின் போது எழுதிய கவிதையின் தமிழ் மொழிபெயர்ப்புக்கு பிரபலங்கள் நெகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
பிரதமர் மோடி, எழுதிய கவிதையின் தமிழ் மொழிபெயர்ப்பை தனது சமூக வலைதள பக்கத்தில் வெளியிட்டுள்ளார். அவரது பதிவுக்கு நெகிழ்ச்சி தெரிவித்துள்ள நடிகர் விவேக் மற்றும் தயாரிப்பாளர் தனஞ்செயன் ஆகியோருக்கு பிரதமர் நன்றி தெரிவித்துள்ளார். தமிழ்மொழி அழகானது, தமிழர்கள் தனித்தன்மை வாய்ந்தவர்கள் என்றும், சிறந்த கலாசாரத்தை கொண்ட மொழியில் எனது எண்ணங்களை வெளிப்படுத்தியது மகிழ்ச்சி என்றும் பிரதமர் மோடி சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ளார்.
Next Story