வழக்கில் தொடர்புடைய நபர் இலங்கைக்கு தப்பிக்க உதவி : ராமநாதபுரத்தை சேர்ந்த 5 மீனவர்கள் சிறையில் அடைப்பு

பல்வேறு வழக்குகளில் தொடர்புடைய நபரை சட்டவிரோதமாக இலங்கைக்கு தப்ப வைத்ததாக 5 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.
வழக்கில் தொடர்புடைய நபர் இலங்கைக்கு தப்பிக்க உதவி : ராமநாதபுரத்தை சேர்ந்த 5 மீனவர்கள் சிறையில் அடைப்பு
x
பல்வேறு வழக்குகளில் தொடர்புடைய நபரை சட்டவிரோதமாக இலங்கைக்கு தப்ப வைத்ததாக 5 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். இலங்கையை  சங்காசி ராந்த் , முகம்மது சப்ராஸ்  ஆகிய இருவர் ​மீதும்  23 -க்கும் மேற்பட்ட வழக்குகள் நிலுவையில் உள்ளன. ஜாமீனில் வெளிவந்த  2 பேரும் இல்ங்கைக்கு தப்பிச் சென்ற நிலையில் அங்குள்ள நீதிமன்றத்தில் ஆஜராகி தற்போது சிறையில் உள்ளனர். தமிழகத்தில் மற்றொரு வழக்கில் ஆஜராக நீதிமன்றம் உத்தரவிட்ட நிலையில், இருவரம் தப்பிச் சென்றது தெரியவந்தது. இதனையடுத்த அவர்களுக்கு உதவியதாக தங்கச்சிமடத்தை சேர்ந்த இன்னாசி, டேனியல், லாப்டிக், தேவிபட்டினத்தை  சேர்ந்த அபுகாசிம், தொண்டியை சேர்ந்த நைனார் சித்திக் ஆகிய 5 பேரையும் பாம்பன் மற்றும் கேணிக்கரை போலீசார் கைது செய்துள்ளனர்.பின்னர் 5 பேரையும்  நீதிபதி  முன் ஆஜர்படுத்தி  சிறையில் அடைத்தனர்.

Next Story

மேலும் செய்திகள்