நீட் தேர்வு ஆள்மாறாட்டம் - சான்றிதழ் சரிபார்ப்பு குழுவினரிடம் விசாரணை
மருத்துவ கல்லூரிகளில் சான்றிதழ் சரிபார்த்த பேராசிரியர் குழுவினரிடம் சிபிசிஐடி காவல்துறையினர் 8 மணி நேரம் விசாரணை மேற்கொண்டனர்.
நீட் தேர்வு ஆள்மாறாட்டம் தொடர்பாக, இதுவரை 10 பேரை கைது செய்து சிறையில் அடைத்துள்ள சிபிசிஐடி போலீசார், 6 மருத்துவ கல்லூரிகளின் சான்றிதழ் சரிபார்ப்பு பேராசிரியர் குழு விசாரணைக்கு ஆஜராகுமாறு சம்மன் அனுப்பினர். அதனடிப்படையில் நேற்று, எஸ்.ஆர்.எம். மருத்துவ கல்லூரி பேராசிரியர் குழு 2 பேரும், சத்யசாய் மருத்துவக் கல்லூரியை சேர்ந்த 8 பேரும் தேனி சமதர்மபுரத்தில் உள்ள சி.பி.சி.ஐ.டி. அலுவலகத்தில் ஆஜராகினர். மொத்தம் 10 பேரிடம் சிபிசிஐடி போலீசார் 8 மணி நேரம் விசாரணை மேற்கொண்டனர். மற்ற மருத்துவக் கல்லூரி சான்றிதழ் சரிபார்ப்பு பேராசிரியர் குழு இன்று விசாரணைக்கு ஆஜராக இருப்பதாக சிபிசிஐடி காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
Next Story