நீலகிரியில் கால்வாயில் விழுந்த பசு மாடு மீட்பு
நீலகிரி மாவட்டம் கிருஷ்ணா புதூர் கிராமத்தில் கழிவு நீர் செல்லும் கால்வாயில் விழுந்த பசுமாட்டை தீயணைப்பு துறையினர் பத்திரமாக மீட்டனர்
நீலகிரி மாவட்டம் , கிருஷ்ணா புதூர் கிராமத்தில் கழிவு நீர் செல்லும் கால்வாயில் விழுந்த பசுமாட்டை தீயணைப்பு துறையினர் பத்திரமாக மீட்டனர். குடியிருப்பு பகுதியில் மேய்ச்சலுக்காக விடப்பட்டிருந்த பசுமாடு எதிர்பாராத விதமாக கால்வாயில் விழுந்தது. இதனையடுத்து தகவலறிந்து வந்த தீயணைப்பு துறையினர், பசு மாட்டை கயிறு கட்டி உயிருடன் மீட்டனர்.
Next Story