நாகர்கோவிலில் ஹெல்மெட் சோதனை-மாணவர் உட்பட 2 பேர் கைது

கன்னியாகுமரி மாவட்டம் செட்டிகுளம் பகுதியில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்ட போது, அந்த வழியாக மோட்டார் சைக்கிளில் ஹெல்மெட் அணியாமல் வந்த 2 பேர் போலீசார் மீது மோதிவிட்டு தப்பி சென்றுள்ளனர்
நாகர்கோவிலில் ஹெல்மெட் சோதனை-மாணவர் உட்பட 2 பேர் கைது
x
கன்னியாகுமரி மாவட்டம் செட்டிகுளம் பகுதியில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்ட போது, அந்த வழியாக மோட்டார் சைக்கிளில் ஹெல்மெட் அணியாமல் வந்த 2 பேர் போலீசார் மீது மோதிவிட்டு தப்பி சென்றுள்ளனர். இதில் போலீஸ்காரர் ஒருவர் படுகாயம் அடைந்தார்.  
விபத்து நிகழ்ந்த இடத்தில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை போலீஸார் ஆய்வு செய்தனர். இதையடுத்து, மயிலாடி பகுதியை சேர்ந்த கல்லூரி மாணவர்  சுபாஷ் மற்றும்  அனீஸ் ஆகிய இருவரை போலீசார் கைது செய்தனர். 

Next Story

மேலும் செய்திகள்