லஞ்சம் பெற்ற சார் பதிவாளர் கைது : கையும் களவுமாக பிடித்த லஞ்ச ஒழிப்பு போலீசார்

வேலூர் மாவட்டம், காட்பாடியை அடுத்த கழிஞ்சூர் பகுதி சார்பதிவாளர் ஒரு லட்ச ரூபாய் லஞ்சம் கேட்டதாக எழுந்த புகாரின் பேரில் லஞ்ச ஒழிப்பு போலீசார், கையும் களவுமாக தேவராஜை கைது செய்தனர்.
லஞ்சம் பெற்ற சார் பதிவாளர் கைது : கையும் களவுமாக பிடித்த லஞ்ச ஒழிப்பு போலீசார்
x
வேலூர் மாவட்டம், காட்பாடியை அடுத்த கழிஞ்சூர் பகுதியை சேர்ந்தவர் சசிகுமார். இவரது சகோதரர்களின் பெயரில் உள்ள சொத்து பத்திரத்தை ஐந்து பெயருக்கு மாற்றித்தருவதற்காக, காட்பாடி சார்பதிவாளர் தேவராஜை அணுகி உள்ளார். அப்போது அவர் சசிகுமாரிடம் ஒரு லட்ச ரூபாய் லஞ்சம் கேட்டதாக தெரிகிறது. இதையடுத்து சசிகுமாரின் புகாரின் பேரில் லஞ்ச ஒழிப்பு துறையினர்  ரசாயனம் தடவிய ரூபாய் நோட்டுகளை லஞ்சமாக கொடுக்குமாறு கூறியுள்ளனர். அந்த ரூபாய் தாள்களை கொடுத்த போது,  மறைந்திருந்த லஞ்ச ஒழிப்பு போலீசார், கையும் களவுமாக தேவராஜை கைது செய்தனர்.

Next Story

மேலும் செய்திகள்