திருவாரூர் அருகே பயிர் காப்பீடு வழங்காததை கண்டித்து விவசாயிகள் போராட்டம்

திருவாரூர் அருகே பயிர் காப்பீட்டை மத்திய மாநில அரசுகள் சரியாக வழங்கவில்லை என குற்றம்சாட்டி விவசாயிகள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
திருவாரூர் அருகே பயிர் காப்பீடு வழங்காததை கண்டித்து விவசாயிகள் போராட்டம்
x
திருவாரூர் அருகே பயிர் காப்பீட்டை மத்திய, மாநில அரசுகள் சரியாக வழங்கவில்லை என குற்றம்சாட்டி  விவசாயிகள் சாலை மறியலில் ஈடுபட்டனர். கஜா புயலால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு, பயிர் காப்பீடு மூலமாக நிவாரணம் வழங்குவதாக முதலமைச்சர் அறிவித்திருந்தார். இந்நிலையில் தற்போது வெளியாகியுள்ள பயிர் காப்பீடு பட்டியலில் பல்வேறு கிராமங்கள் விடுபட்டுள்ளன. இதனால் ஆங்காங்கே விவசாயிகள் போராட்டங்களில் ஈடுபட்டு வரும் நிலையில், இன்று திருவாரூர் அருகே மறியல் போராட்டம் நடைபெற்றது. இது குறித்து தகவலறிந்து வந்த போலீசார், மறியலில் ஈடுபட்டவர்களை கைது செய்து அழைத்து சென்றனர்.

Next Story

மேலும் செய்திகள்