நடிகர் சங்க தேர்தல் தொடர்பான வழக்கு - இன்று மீண்டும் விசாரணைக்கு வருகிறது
நடிகர் சங்க தேர்தல் தொடர்பான வழக்கு: இன்று மீண்டும் விசாரணைக்கு வருகிறது
நடிகர் சங்க தேர்தல் தொடர்பான வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வருகிறது. தென்னிந்திய நடிகர் சங்க தேர்தல் கடந்த ஜூன் மாதம் 23ஆம் தேதி நடைபெற்றது. இதில் நாசர், விஷாலின் பாண்டவர் அணியும், பாக்யராஜ், ஐசரி கணேசின் சுவாமி சங்கரதாஸ் அணியும் மோதின. தேர்தலில் பதிவான வாக்குகளை எண்ணி முடிவுகளை அறிவிக்க சென்னை உயர்நீதிமன்றம் இடைக்கால தடை விதித்தது. இந்நிலையில் இந்த வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வருகிறது. பதிவான ஓட்டுக்களை எண்ணுவது குறித்து உத்தரவு ஏதாவது பிறப்பிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Next Story