சிங்கப்பூரில் இருந்து வந்த நபரிடம் தங்கம் பறிமுதல்
மதுரை விமான நிலையத்தில், இரண்டரை கிலோ கடத்தல் தங்கக் கட்டிகளை போலீசார் பறிமுதல் செய்தனர்.
மதுரை விமான நிலையத்தில், இரண்டரை கிலோ கடத்தல் தங்கக் கட்டிகளை போலீசார் பறிமுதல் செய்தனர். தங்கம் கடத்துவதாக வந்த ரகசிய தகவலை அடுத்து சுங்கத்துறை அதிகாரிகள், தீவிர சோதனையில் இறங்கினர். அப்போது, சிங்கப்பூரில் இருந்த வந்த திருச்சியைச் சேர்ந்த வகாப் மகன் தஸ்தகீர் வைத்திருந்த பையில் சோதனை நடத்தியுள்ளனர். எல்.இ.டி. லைட்-ஐ சோதனை செய்தபோது, அதில், தங்கக் கட்டிகள் மறைத்து வைக்கப்பட்டிருந்தது தெரியவந்தது. 100 கிராம் அளவிலான இரண்டரை கிலோ தங்கக் கட்டிகளை சுங்கத் துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். தொடர்ந்து அவரிடம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.
Next Story