பருவமழையை எதிர்கொள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கை : அமைச்சர் உதயகுமார் தலைமையில் ஆலோசனை கூட்டம்
வடகிழக்குப் பருவமழையை எதிர்கொள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் தெரிவித்துள்ளார்.
வடகிழக்குப் பருவமழையை எதிர்கொள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் தெரிவித்துள்ளார். பருவமழை முன்னேற்பாடு குறித்து, காஞ்சிபுரம் ஆட்சியர் அலுவலகத்தில் அனைத்துத்துறை அதிகாரிகளுடனான ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய, அமைச்சர் ஆர்.பி. உதயகுமார், காஞ்சிபுரம் மாவட்டத்தில் மழையால் பாதிக்கப்பட கூடிய 515 இடங்கள் கண்டறியப்பட்டுள்ளதாக தெரிவித்தார். ஏரிகள் தூர்வாரப்பட்டு, மழைநீர் வடிகால் அமைக்கப்பட்டுள்ளதால் இந்த முறை பாதிப்பு பெருமளவு இருக்காது என்று அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் கூறினார்.
Next Story