சவுதியில் உயிரிழந்த மகன் - உடலை வரவழைத்து தரும்படி பெற்றோர் மனு
சவுதியில் உயிரிழந்த தங்களது மகனின் உடலை மீட்டுத் தரும்படி, பெற்றோர் கண்ணீர் விட்டபடி மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தது, நெஞ்சை உருக்கும் விதமாக இருந்தது.
சவுதியில் உயிரிழந்த தங்களது மகனின் உடலை மீட்டுத் தரும்படி, பெற்றோர் கண்ணீர் விட்டபடி மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தது, நெஞ்சை உருக்கும் விதமாக இருந்தது. உளுந்தூர்பேட்டை அடுத்த சாலாப்பாக்கத்தை சேர்ந்த குப்புசாமி என்பவரது மகன், முத்து இரண்டு மாதங்களுக்கு முன்பு சவுதி சென்றுள்ளார். அங்கு, எலக்டீரிசயனாக பணியாற்றிய நிலையில், மின்சாரம் பாய்ந்து இறந்துள்ளார். தற்போது, தங்களது மகன் உடலை பெற்றுத் தருமாறு பெற்றோர் கண்ணீர் மல்க கோரிக்கை விடுத்துள்ளனர். உடனடியாக நடவடிக்கை எடுப்பதாக ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
Next Story