சென்னை திருவொற்றியூர் சுற்றுவட்டார பகுதிகளில் மாலைவேளையில் கொட்டித்தீர்த்த கனமழை

சென்னை திருவொற்றியூர் சுற்றுவட்டார பகுதிகளில் நேற்று மாலை இடி மின்னலுடன் கனமழை பெய்தது.
சென்னை திருவொற்றியூர் சுற்றுவட்டார பகுதிகளில் மாலைவேளையில் கொட்டித்தீர்த்த கனமழை
x
சென்னை திருவொற்றியூர் சுற்றுவட்டார பகுதிகளில் நேற்று மாலை இடி, மின்னலுடன் கனமழை பெய்தது.மாலையில் சுமார் ஒரு மணிநேரம் கொட்டிதீர்த்த கனமழையால் சாலைகளில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது. மழை காரணமாக பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.

பொன்னேரி சுற்றுவட்டார பகுதிகளில் பலத்த காற்றுடன் கனமழை




திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி சுற்றுவட்டார கிராமங்களில் நேற்று மாலை பலத்த காற்றுடன் கனமழை பெய்தது.  பொன்னேரி தேரடி ரயில்வே மேம்பாலம் பகுதியில் மழைநீர் தேங்கி நின்றதால், அதனை கடந்துசெல்ல முடியாமல் வாகன ஓட்டிகள் கடும் சிரமத்திற்கு உள்ளாகினர்.

கரூரில் கனமழை




கரூர் மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் நேற்று மாலை சுமார் 2 மணிநேரம் கனமழை பெய்தது. இதனால் கரூர், கிருஷ்ணராயபுரம், அரவக்குறிச்சி, குளித்தலை,  புலியூர் உள்ளிட்ட பகுதிகளில் சாலைகளில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது. இதனால் வாகன ஓட்டிகள் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகினர்.

பெரியகுளம் சுற்றுவட்டார பகுதிகளில் சாரல் மழை



தேனி மாவட்டம் பெரியகுளம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதியில் பரவலாக சாரல் மழை பெய்தது. தொடர்ந்து 3-வது நாளாக பெய்த சாரல் மழை காரணமாக அப்பகுதி விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

கொடைக்கானல் சுற்றுவட்டார பகுதியில் தொடரும் மழை



திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் மற்றும் சுற்றுவட்டார மலைக்கிராமங்களில் நேற்று மாலை முதல் மிதமான மழை பெய்து வருகிறது. . அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளதால், விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

Next Story

மேலும் செய்திகள்