திருவாலீஸ்வரர் கோயில் கும்பாபிஷேக விழா - திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.

திருவள்ளூர் மாவட்டம் அரசூரில் பழமை வாய்ந்த சௌந்தரவல்லி உடனுறை திருவாலீஸ்வரர் கோவில் கும்பாபிஷேக விழா நடைபெற்றது.
திருவாலீஸ்வரர் கோயில் கும்பாபிஷேக விழா - திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.
x
திருவள்ளூர் மாவட்டம் அரசூரில் பழமை வாய்ந்த சௌந்தரவல்லி உடனுறை திருவாலீஸ்வரர் கோவில் கும்பாபிஷேக விழா, நடைபெற்றது. இதனையொட்டி கோயிலில் கடந்த 3 நாட்களாக யாகசாலை பூஜைகள் நடைபெற்று வந்தது.  நிறைவு நாளான இன்று புண்ணிய நதிகளில் இருந்து கொண்டுவரப்பட்ட புனித தீர்த்தத்தை கொண்டு, சிவாச்சாரியார்கள் ராஜகோபுரம் உள்ளிட்ட நிலைக் கோபுரங்களுக்கு அஷ்டபந்தன மகா கும்பாபிஷேகத்தை வெகு சிறப்பாக நடத்தினர். இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். சிவன், பார்வதி, விநாயகர் வேடமணிந்த கலைஞர்கள் நடத்திய சிவபுராண நாடகம் பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தது.

Next Story

மேலும் செய்திகள்