கடலூரில் கனமழை - மக்கள் மகிழ்ச்சி

கடலூர் மாவட்ட சுற்று வட்டார பகுதிகளில் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக பெய்த பலத்த மழையால் சாலைகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது.
கடலூரில் கனமழை - மக்கள் மகிழ்ச்சி
x
கடலூர் மாவட்ட சுற்று வட்டார பகுதிகளில் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக பெய்த பலத்த மழையால் , சாலைகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது. தற்போது அங்கு நிலவி வரும் குளிர்ச்சியான சூழலால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில்  மழை - பொதுமக்கள், விவசாயிகள் மகிழ்ச்சி



தஞ்சாவூர் மாவட்டம் நாஞ்சிக்கோட்டை, திருவையாறு, 
அம்மாபேட்டை உள்ளிட்ட பல்வேறு பகுதிகள் பலத்த மழை  பெய்தது.  
கும்பகோணத்தில் திடீரென்று பெய்த மழையால் சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது.

தேனி மாவட்டம் மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளான பெரியகுளம், லட்சுமிபுரம், கும்பக்கரை, சோத்துப்பாறை, லட்சுமிபுரம் உள்ளிட்ட பகுதிகளில் பரவலாக சாரல் மழை பெய்தது.

சேலம் மாவட்டம் ஓமலூர்,காடையாம்பட்டி வட்டார கிராம பகுதிகளில் கடந்த இரண்டு ஆண்டுகளாக பருவ மழை பொய்த்து போன நிலையில், கடந்த ஒரு மாதமாக அவ்வப்போது பெய்து வரும் மழையால் பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். 



Next Story

மேலும் செய்திகள்