சீட்டுக் கம்பெனி நடத்தி பணம் மோசடி : 3 பெண்களுக்கு தலா 7 ஆண்டுகள் சிறை

திருச்சியில், சீட்டு கம்பெனி நடத்தி பணம் மோசடியில் ஈடுபட்ட, ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பெண்களுக்கு தலா 7 ஆண்டு சிறை தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
சீட்டுக் கம்பெனி நடத்தி பணம் மோசடி : 3 பெண்களுக்கு தலா 7 ஆண்டுகள் சிறை
x
திருச்சி கே கே நகர் பகுதியை சேர்ந்தவர் தமயந்தி மற்றும் அவருடைய மகள் ராஜலட்சுமி, மருமகள் ராணி. இவர்கள் அனைவரும் இணைந்து நடத்திய, சீட்டு கம்பெனியில், 34 நபர்கள் சீட்டு கட்டி வந்துள்ளனர். இந்நிலையில் யாருக்கும் பணம் திருப்பி தரவில்லை என கூறி, தொடரப்பட்ட வழக்கு, திருச்சி தலைமை குற்றவியல் நீதிமன்றத்தில் நடந்து வந்தது. இதனை தொடர்ந்து, குற்றம் நிரூபிக்கப்பட்டதால், தமயந்தி, ராணி மற்றும் ராஜலட்சுமி ஆகியோருக்கு மோசடி வழக்கில் 5 வருட சிறை தண்டனையும் 1,000 ரூபாய் அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது. சீட்டு நிதியங்கள் சட்டத்தின்படி இரண்டு வருட சிறை தண்டனையும் 2,000 ரூபாய் அபராதமும் சிறை தண்டனையை ஏக காலத்தில் அனுபவிக்க வேண்டும் எனவும் இந்த வழக்கில் சாட்சி அளித்த 29 பேருக்கு தலா ஒரு லட்சம் என 29 லட்சம் வழங்க வேண்டும் எனவும் திருச்சி தலைமை குற்றவியல் நீதிமன்ற நீதிபதி தீர்ப்பளித்தார்.

Next Story

மேலும் செய்திகள்