மர்ம பொருள் வெடித்து இருவர் உயிரிழந்த சம்பவம் : வெடித்த‌து ராணுவத்திற்கு பயன்படுத்தப்படும் ஷெல்

காஞ்சிபுரம் மானாமதி கோவிலில் 2 பேர் உயிரிழக்க காரணமான வெடிபொருள் பொருள் ராணுவத்திற்கு பயன்படுத்தப்படும் ஷெல் என்பது தெரிய வந்துள்ளது.
மர்ம பொருள் வெடித்து இருவர் உயிரிழந்த சம்பவம் : வெடித்த‌து ராணுவத்திற்கு பயன்படுத்தப்படும் ஷெல்
x
காஞ்சீபுரம் மாவட்டம் திருப்போரூரை அடுத்த மானாமதி கிராமத்தில் உள்ள கங்கையம்மன் கோவில் குளத்தை சுத்தம் செய்த போது , மர்ம பொருள் ஒன்று கண்டெடுக்கப்பட்டது. அதனைஅப்பகுதியை சேர்ந்த இளைஞர்கள் உடைக்க முயன்றபோது, பயங்கர சத்த‌த்துடன் அந்த பொருள் வெடித்து சிதறியது. இதில் படுகாயம் அடைந்த இளைஞர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். அங்கு சிகிச்சை பலனின்றி கூவத்தூரை சேர்ந்த சூர்யா என்பவர் உயிரிழந்தார். இந்த நிலையில் இன்று காலை திலீபன் என்பவரும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.  இந்தநிலையில் மானாம்பதி குண்டு வெடித்த பகுதி முழுவதையும் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்த போலீசார், ஓய்வு பெற்ற ராணுவ அதிகாரிகள், வெடி குண்டு நிபுணர்கள், மோப்ப நாய்கள் உதவியுடன் சோதனையில் ஈடுபட்டனர். அங்கு வெடிக்காத மற்றொரு மர்ம பொருள் கண்டெடுக்கப்பட்டது. இதனால் பதற்றம் அதிகரித்த‌து. இந்த நிலையில் வெடித்த பொருள் ராணுவ ராக்கெட் லாஞ்சரில் பயன்படுத்தப்படும் ஷெல் என்பது தெரிய வந்துள்ளது. ஷெல் இந்த பகுதிக்கு வந்த‌து எப்படி  என்பது குறித்து போலீசார் தொடர் விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர்.

Next Story

மேலும் செய்திகள்