தீவிரவாத அச்சுறுத்தல் - பாதுகாப்பு தீவிரம்

தமிழகத்தில் தீவிரவாதிகள் ஊடுருவி உள்ளதாக வந்த தகவலை அடுத்து, அனைத்து மாவட்டங்களிலும் பாதுகாப்பாபு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
தீவிரவாத அச்சுறுத்தல் - பாதுகாப்பு தீவிரம்
x
தமிழ்நாடு கேரளா எல்லைகளில் இரு மாநில போலீசாரும் துப்பாக்கி ஏந்திய நிலையில் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டுள்ளனர். கோவை மாவட்ட எல்லையான ஆனைகட்டி மற்றும் மாங்கரை ஆகிய பகுதிகளில் கேரளாவிலிருந்து வரும் ஒவ்வொரு வாகனங்களும் தீவிர சோதனைக்கு உட்படுத்தப்படுகின்றன. 

சேலம் ரயில் நிலையத்தில் மோப்பு நாயுடன் ரயில்வே மற்றும் சேலம் ரயில் நிலைய போலீசார் தீவிர சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். ஜங்ஷன் ரயில் நிலையம் வரும் ஒவ்வொரு பயணிகளும் தீவிர சோதனைக்கு பின்னரே  ரயில் நிலையத்துக்குள் அனுமதிக்கப்படுகின்றனர்.

திருப்பூர் ரயில் மற்றும் பேருந்து நிலையங்களில் போலீசார் தீவிர சோதனையில் ஈடுபட்டுள்ள நிலையில், தீவிரவாதிகள் பயன்படுத்தப்படும் வாகனத்தின் பதிவெண்கள் முக்கிய இடங்கள், காவல் நிலயங்கள், மற்றும் பொதுமக்கள் கூடும் இடங்களில் ஒட்டப்பட்டுள்ளன.

நீலகிரி மாவட்டத்தில் இலங்கை தமிழர்கள் அதிகமாக வசிக்கக் கூடிய கூடலூர், கோத்தகிரி ஆகிய பகுதிகளில் பாதுகாப்பு தீவிரபடுத்தப்பட்டுள்ளது. சுற்றுத்தலங்களில் துப்பாக்கி ஏந்திய போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.

Next Story

மேலும் செய்திகள்