மேற்கு தொடர்ச்சி மலை பகுதிகளில் கனமழை - மஞ்சளாறு அணையின் நீர்மட்டம் உயர்வு
பெரியகுளம் அருகே உள்ள மஞ்சளாறு அணைக்கு நீர் வரத்து அதிகரித்துள்ளது.
மேற்கு தொடர்ச்சி மலை பகுதிகளில் பெய்து வரும் கனமழை காரணமாக பெரியகுளம் அருகே உள்ள மஞ்சளாறு அணைக்கு நீர் வரத்து அதிகரித்துள்ளது.நீர்வரத்து 13 கன அடியாக உள்ள நிலையில் அணையின் நீர்மட்டம் 35 அடியாக அதிகரித்துள்ளதாக பொதுப்பணித்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதனால் சுற்றுவட்டார பகுதி விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
Next Story