சுதந்திர தினத்தை முன்னிட்டு விமான நிலையத்திற்கு 5 அடுக்கு போலீஸ் பாதுகாப்பு

சுதந்திர தினத்தை முன்னிட்டு கோவை விமான நிலையத்திற்கு 5 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
சுதந்திர தினத்தை முன்னிட்டு விமான நிலையத்திற்கு 5 அடுக்கு போலீஸ் பாதுகாப்பு
x
சுதந்திர தினத்தை முன்னிட்டு, கோவை விமான நிலையத்திற்கு 5 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. வரும் 15ஆம் தேதி சுதந்திர தினம் கொண்டாடப்பட உள்ளது. காஷ்மீர் விவகாரம் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், முக்கிய இடங்களில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு வருகிறது. இதன் அடிப்படையில் கோவை விமான நிலையத்தில் 5 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. மேலும் விமான நிலையத்துக்குள் வரும் அனைத்து வாகனங்களும், பரிசோதனை செய்த பின்பே உள்ளே அனுமதிக்கப்படுகிறது. 24 மணி நேரமும் இந்த சோதனை தொடரும் நிலையில், பாதுகாப்பு பணியில் நூற்றுக்கும் மேற்பட்ட மத்திய மற்றும் மாநில போலீசார் ஈடுபட்டுள்ளனர்.

Next Story

மேலும் செய்திகள்