நீலகிரி மாவட்டத்தில் ஸ்டாலின் 2-வது நாளாக ஆய்வு

நீலகிரி மாவட்டத்தில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை தி.மு.க. தலைவர் ஸ்டாலின் இன்று பார்வையிட்டார்.
நீலகிரி மாவட்டத்தில் ஸ்டாலின் 2-வது நாளாக ஆய்வு
x
நீலகி​ரி மாவட்டத்தில் பலநாட்களுக்கு பின்னர் இன்று வெயில் அடிக்கத் தொடங்கி உள்ளது. இதனிடையே தொடர் கனமழை மற்றும் வெள்ளம், மண்சரிவு ஆகியவற்றால் பாதிக்கப்பட்ட குருத்துக்குளி, எம். பாலடா, எமரால்டு  பகுதிகளை இரண்டாவது நாளாக இன்று காலை தி.மு.க. தலைவர் ஸ்டாலின் பார்வையிட்டதுடன், குருத்துக்குளி பகுதியில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஆறுதல் கூறினார். இதனைத் தொடர்ந்து  கப்பத்தொரை பகுதியில் பொது மக்களை சந்தித்து ஆறுதல் கூறியதுடன், அங்கு வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை நடந்து சென்று பார்வையிட்டார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், மழை வெள்ளத்தால் உயிரிழந்தவர்களின் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்க வேண்டும் என்றார். நீலகிரி தொகுதிக்கு திமுக சார்பில் 10 கோடி ரூபாய் வழங்கப்படும் எனவும் அவர் கூறினார்.

Next Story

மேலும் செய்திகள்