போடி அருகே பள்ளியின் மேற்கூரை சேதமடைந்ததால் பாதிப்பு - பெற்றோர்கள் சாலை மறியல்

தேனி மாவட்டம் போடி அருகே பள்ளியின் மேற்கூரை சேதமடைந்ததால் வகுப்பு அறையில் மழை நீர் புகுந்தது.
போடி அருகே பள்ளியின் மேற்கூரை சேதமடைந்ததால் பாதிப்பு - பெற்றோர்கள் சாலை மறியல்
x
தேனி மாவட்டம் போடி அருகே பள்ளியின் மேற்கூரை சேதமடைந்ததால், வகுப்பு அறையில் மழை நீர் புகுந்தது.  குச்சனூர் ஊராட்சி துவக்கப்பள்ளியில் 250க்கும்  மேற்பட்ட பள்ளி மாணவ-மாணவிகள் படித்து வருகின்றனர் இந்நிலையில் இன்று காலை முதல் மழை பெய்து வருவதால் பள்ளியின் மேற்கூரை சேதமடைந்தது, வகுப்பறையில் தண்ணீர் சொட்டியது. இதனால், பள்ளி மாணவர்கள் பாதிக்கப்பட்டனர். இதனை கண்டித்து பெற்றோர்கள்  தேனி குச்சனுர் சாலையில் மறியலில் ஈடுபட்டனர்.தகவல் அறிந்து வந்த அதிகாரிகள், பேச்சுவார்த்தை நடத்தியதை அடுத்து பொதுமக்கள் போராட்டத்தை கைவிட்டனர். இதனையடுத்து, பள்ளிக்கு ஒரு நாள் விடுமுறை அளிக்கப்பட்டது.

Next Story

மேலும் செய்திகள்