17 வயது சிறுமியை பலாத்காரம் செய்த அ.தி.மு.க. பிரமுகர் கைது

சிதம்பரம் அருகே 17 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்து கர்ப்பிணியாக்கிய அ.தி.மு.க. பிரமுகரை போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்தனர்.
17 வயது சிறுமியை பலாத்காரம் செய்த அ.தி.மு.க. பிரமுகர் கைது
x
சிதம்பரம் அருகே ஸ்ரீமுஷ்ணம் படைவீட்டு மாரியம்மன் கோவில் பகுதியை சேர்ந்தவர் திருமுருகன். இவர் அ.தி.மு.க. நிர்வாகியாக உள்ளார். 17 வயது சிறுமி ஒருவரை கடந்த சில மாதங்களுக்கு முன்பு வேளாங்கண்ணிக்கு அழைத்துச் சென்ற திருமுருகன், அவருடன் உல்லாசமாக இருந்துள்ளார். இதனால், கர்ப்பம் அடைந்த 17 வயது சிறுமியை கோயிலில் வைத்து திருமுருகன் திருமணமும் செய்துள்ளார். இந்நிலையில் சேத்தியாத்தோப்பு அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் தமக்கு நிகழ்ந்தது குறித்து சிறுமி புகார் அளித்தார். இதனையடுத்து அ.தி.மு.க. பிரமுகர் திருமுருகனை கைது செய்த போலீசார், அவர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்துள்ளனர். 

Next Story

மேலும் செய்திகள்