அதிமுக தரமான இயக்கம் - முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பெருமிதம்

ஐ.எஸ்.ஐ. முத்திரை பொருத்திய தரமான இயக்கம் அ.தி.மு.க. என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
அதிமுக தரமான இயக்கம் - முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பெருமிதம்
x
ஐ.எஸ்.ஐ. முத்திரை பொருத்திய தரமான இயக்கம் அ.தி.மு.க. என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். வேலூர் தொகுதி அதிமுக கூட்டணி வேட்டபாளர் ஏ.சி.சண்முகத்தை ஆதரித்து ஆம்பூரில் பொதுக்கூட்டம்  நடைபெற்றது. இதில் பங்கேற்று பேசிய முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, எதை சொல்லுகிறமோ அதனை நிறைவேற்றி வருவதாக தெரிவித்தார்.

யாரால் தேர்தல் நிறுத்தப்பட்டது என்பது அனைவருக்கும் தெரியும் - முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி

ஏ.சி.சண்முகத்தை ஆதரித்து வாணியம்பாடி பேருந்து நிலையம் அருகே நடைபெற்ற பிரசார கூட்டத்தில் 15க்கும் மேற்பட்ட அமைச்சர்கள் கலந்துகொண்டனர்.  அங்கு பேசிய முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, யாரால் வேலூர் தொகுதியில் தேர்தல் நிறுத்தப்பட்டது என்பது அனைவருக்கும் நன்கு தெரியும் என்று கூறினார்.  திமுக பொய் பிரசாரம் செய்து தேர்தலில் வெற்றி பெற்றதாகவும் அவர் தெரிவித்தார்.தமிழகத்தில் திமுக ஒருபோதும் ஆட்சிக்கு வர முடியாது என்றும் முதலமைச்சர் தெரிவித்தார். 

Next Story

மேலும் செய்திகள்