வேலூர் தொகுதி திமுக வேட்பாளரை ஆதரித்து ஸ்டாலின் பிரசாரம் - முதலமைச்சர் பிரசாரம் செய்யும் நாளில் ஸ்டாலின் வாக்கு சேகரிப்பு

வேலூர் மக்களவை தேர்தலில் தி.மு.க. வேட்பாளர் கதிர் ஆனந்த்தை ஆதரித்து இரண்டு கட்டங்களாக தி.மு.க. தலைவர் ஸ்டாலின் பிரசாரம் செய்கிறார்.
வேலூர் தொகுதி திமுக வேட்பாளரை ஆதரித்து ஸ்டாலின் பிரசாரம் - முதலமைச்சர் பிரசாரம் செய்யும் நாளில் ஸ்டாலின் வாக்கு சேகரிப்பு
x
வேலூர் மக்களவை தேர்தலில், தி.மு.க. வேட்பாளர் கதிர் ஆனந்த்தை ஆதரித்து இரண்டு கட்டங்களாக தி.மு.க. தலைவர் ஸ்டாலின் பிரசாரம் செய்கிறார். இதற்காக நாளை மாலை வேலூர் புறப்படும் ஸ்டாலின், நாளை மறுதினம் 27ம் தேதி துவங்கி, 28, 29 ஆகிய மூன்று நாட்கள் பிரச்சாரம் செய்கிறார். இதனையடுத்து, ஆகஸ்ட் மாதம் 1,2,3 ஆகிய மூன்று நாட்கள் அவர் பிரசாரம் மேற்கொள்ள உள்ளார். வரும் சனிக்கிழமை மற்றும் ஞாயிற்றுகிழமைகளில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியும் பிரசாரம் செய்ய இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், வேலூரில் தேர்தல் பிரசாரம் களைகட்டியுள்ளது.

Next Story

மேலும் செய்திகள்